2011ம் ஆண்டு ஈரோடு சங்கமம் நடந்தது ஒரு விபத்து இந்த வருடம் சங்கமம் எப்படி நடத்தப்போகிறோம் என்று நவம்பர் முதல் மாதத்தில் எங்கள் குழும மடலில் கேட்ட போது நடத்துவதைப்பற்றி அனைவரும் யோசித்தார்கள். அதற்கு முக்கிய காரணம் விழா ஏற்பாடுகள் என்றால் சும்மா இல்லை அதற்கு நிறைய உழைக்கனும் அனைவரும் அவர்கள் வேலையையும் பார்க்கனும் சங்கம வேலைகளையும் பார்க்கனும். எங்கள் குழும தலைவர் அண்ணன் தாமோதர் சந்துரு அவர்கள் இந்த வருடம் நடத்தியே தீரனும் என்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் இருந்து ஒவ்வொருவரும் ஒரு வேளையை பிரித்துக் கொண்டு 10 நாளில் நடத்துவது என்று முடிவு செய்து விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யபப்பட்டது.
எங்கள் குழுமத்திற்கு என்று ஒரு வலைப்பதிவு உள்ளது அதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுவர். உறுப்பினர்களை நாங்கள் யாரும் போய் வாங்க வந்து உறுப்பினராகுங்கள் என்று அழைப்பதில்லை விருப்பமுள்ளவர்கள் எங்கள் குழுமத்திற்கு மடல் அனுப்பினால் போதும் உறுப்பினராக சேர்த்துக்கொள்வோம். சேர்ந்த பின் அவர்களுக்கு குழும மடல் முகவரி கொடுத்து கருத்து கேட்போம் வருடம் ஒருவர் தலைவராக இருந்து சங்கமத்தை நடத்தி வருகிறோம்..
அதன் படி இந்த வருடம் சங்கமம் 2011 பதிவுலகில் ஒரு வரலாறு காணத நினைவாக நண்பர்களை அழைத்து சங்கமத்தை வெற்றியோடு நடத்தினோம். ஒரு விழா என்றால் அனைத்தையும் 100% சரியாக நடத்துவது என்பது இயலாத காரியம். விழா நடத்தும் நண்பர்கள் என்ன முடிவு செய்கிறோமோ அவ்வாறு தான் விழா நடத்த இயலும். குழுமத்தில் முடிவு செய்த படி 2011 சங்கமம் வெற்றிகரமாக நடந்தது. நண்பர்கள் கருத்து சொன்னால் அதை ஏற்றுக்கொண்டு அடுத்து சங்கமத்தில் அதை சரிசெய்து விடலாம். இப்படித்தான் அனைத்து விழாக்களும் நடக்கிறது இதற்கு நம் குடும்ப விழாவும் விதிவிலக்கல்ல..
இனி பாலிடிக்ஸ்...
ஈரோட்டில் நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் குழுமத்தில் வந்து சேர வேண்டும் என்பது கட்டாயமல்ல. விருப்பம் இருப்பவர்கள் வந்து சேரலாம் முடிந்தால் அவர்கள் ஒரு குழுமம் அமைத்து நிகழ்ச்சிகளை நடத்தலாம் யாரையும் யாரும் வேண்டாம் என்று சொல்ல உரிமை இல்லை..
நண்பர் சிபி செந்தில் குமார் நடுநிலை என்ற பெயரில் ஒரு உள்குத்து பதிவிட்டு அதில் ஈரோட்டில் பல பதிவர்கள் இருக்கின்றனர் அவர்களை ஏன் நிகழ்ச்சி நடத்துவர்கள் தொலைபேசியிலோ, மெயில் ஐடியிலோ தொடர்பு கொண்டு ஒரு நான்கு நிமிடம் பேசி வில்லை என்று பதிவிட்டு இருக்கிறார்..
ஏங்க சிபி உங்ககிட்ட நிகழ்ச்சி நடத்துபவர்கள் எல்லாம் 4 நிமிடம் பேசியதால் தான் நீங்கள் வந்தீர்களா???
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பெயரையும், தொலை பேசி ஒவ்வொரு பதிவுவிலும் கொடுத்திருந்தோம் ஏன் நீங்கள் சொல்லும் பிரபல பதிவர்கள் எங்களையாரைவாது அழைத்திருக்கலாமே ஏன் அழைக்கவில்லை??
வெளியூரில் இருந்து பல பதிவர்கள் எங்கள் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார்கள் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த வீடு சுரேஷ் கூட தொடர்பு கொண்டு வருகிறேன் என்று கூறினார் அது மாதிரி இவர்களும் அழைத்திருக்கலாமே?? அல்லது மிஸ்டுகாலாவது கொடுத்திருக்கலாமே???
அப்புறம் சிபி குழுமத்தில் உள்ள பவளசங்கரியை எனக்குத் தெரியவில்லை பதிவு எழுதும் போது உங்களை தொடர்பு கொண்டு பேசினேன் என்று சொல்லி உள்ளீர்கள் அது உண்மைதான்... பவளசங்கரியை மட்டுமல்ல ரோகிணிசிவா, அமரபாரதி, இளா, ராஜி, திருஞானசம்பந்தம் இன்னும் எங்கள் குழுவில் உள்ள நிறைய பேரை எனக்குத் தெரியாது ஆனால் அவர்களிடம் குழும மடல் தொடர்புண்டு.
குழுமத்தில் இருந்தால் அவர்களைத் தெரிய வேண்டும் என்று அவசியம் உண்டா சிபி...
அடுத்து மெட்ராஸ்பவன் சிவக்குமார் சில குறைகளை என்னிடம் சொன்னார் சரிங்க அடுத்த முறை சரிசெய்து விடலாம் அவசரத்தில் நடந்த நிகழ்வு என்றேன்.. இந்த நிகழ்வு எனக்கும் சிவக்குமாருக்கும் இடையே நடந்தது இதில் நீங்கள் சங்கவியிடம் சொன்னீங்க.. கதிர் தானே லீடர் என்று தனிமனிதர் தாக்குதலை நடத்தி உள்ளீர்கள் இதற்கு என் பகிரங்க கண்டங்களை பதிவு செய்கிறேன் சிபி...
இதே இடத்தில் வீடு சுரேஷ் என்னும் பதிவர் நான் சிவக்குமாரிடம் மன்னிப்பு கேட்டதாக ஒரு தவறான தகவலை வெளியிட்டுள்ளார். சுரேஷ் நீங்க என்ன நடந்தது என்று சிவக்குமார்கிட்டடே கேட்டுக்கங்க...
சுரேஷ் இப்பதான் பதிவுலகிற்கு வந்து நிறைய எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்...
சிபி உங்களால் நிறைய பதிவு ஒரே நாளில் எழுதி வெளியிட முடியும் என்பது எனக்கு தெரியும் நிச்சயம் இந்த பதிவை ஹிட்ஸ்க்காக எழுதியிருக்க மாட்டீர்கள்... நிகழ்ச்சியை நடத்திய எங்களின் மனம் புண்ணாகவேண்டும் என்று உள்குத்துடன் எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்...
சிபி, ஈரோட்டில் இருக்கும் எங்களை தொலைபேசியில் அழைக்கவில்லை என்று கூறும் நண்பர்களே நீங்கள் தமிழகம் தழுவிய ஒரு பதிவர் சந்திப்பு நடத்துவீர்கள் என்றுத் அதில் தவறே இல்லாமல் நடத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் சீக்கிரம் தேதியை அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்க்றோம்..

21 comments:
//அல்லது மிஸ்டுகாலாவது கொடுத்திருக்கலாமே???//
நெத்தியடி
சிவக்குமாரும் கண்டனத்தை தெரிவித்தார்.....நீங்க ஏன்?இப்படி கமெண்ட் போட்டிங்க...அவர் மன்னிப்பு கேட்டதாக...சொல்லவேயில்லையே?அடுத்தமுறை சரிசெய்வதாகத்தானே கூறினார்...என்று நான் தான் மன்னிப்பு கேட்டதாக தவறாக புரிந்து கொண்டேன்! மன்னித்துக் கொள்ளவும்...சங்கவி.
இந்த போஸ்ட்டை லைக்குகிறேன்.
செந்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
Loosla vidungapa!
வணக்கம் சங்கவி சார். தங்கள் கருத்தை 100% சதம் ஆமோதிக்கிறேன். வாசலில் கதிர் அவர்கள் முதலில் தென்பட்டதால் அவரிடம் பேச எண்ணினேன். அவர் 'மதிய உணவு அருந்திவிட்டு வாருங்கள் பேசலாம்' என்றார். அதன் பின்புதான் சங்கவியிடம் பேசினேன். ஆனால் என்னிடம் பேச கதிர் அவர்கள் நேரம் ஒதுக்கவில்லை என திரித்து சொன்னது முற்றிலும் தவறு.
நண்பர்களுக்கு மீண்டும் மீண்டும் தெளிவாக கூறுகிறேன். சங்கவி அவர்கள் வரும் பதிவர் சந்திப்புகளில் குறைகளை சரி செய்கிறோம் என்றுதான் கூறினார். மன்னிப்பு கேட்கவில்லை. அப்படி எந்த இடத்திலும் நான் குறிப்பிடவும் இல்லை.
இதற்கு மேல் இதை தொடர்வதில் பிரயோஜனம் இல்லை என்றே நினைக்கிறேன். விவரம் வேண்டுவோர் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்: 98416 11301. மற்றபடி நான் சொன்னதாக ஏதேனும் தவறான செய்திகள் வெளியானால் கண்டிப்பாக நான் பொறுப்பேற்க முடியாது.
நண்பரே, உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ ல் பதிவுகளை பகிருங்கள்.
// நிச்சயம் இந்த பதிவை ஹிட்ஸ்க்காக எழுதியிருக்க மாட்டீர்கள்... //
அப்படியெல்லாம் நினைக்கப்பிடாது....
நண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.
ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்தும் போது சில சிறிய தவறுகள் நடைபெறலாம் அதை விமர்ச்சனம் செய்பவர்களை பொருட்படுத்தாமல் தங்கள் பணியிணை தொடருங்கள். நண்பர்கள் கருத்து சொன்னால் அதை ஏற்றுக்கொண்டு அடுத்து சங்கமத்தில் அதை சரிசெய்து விடுங்கள்.
Ungalakulle pesi theerka vendiya prachanaiyai podhuvil vivaadhipadhu sarialla . ungalukkule otrumai illaiyaa?
@ சங்கமேஸ்
உங்கள் கருத்தைத் தெரிவிப்பது உங்கள் விருப்பம் எனினும். இதைத் தவிர்த்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது. முன்னமே சொன்னதுபோலத்தான் நியாயமான குறைகளை முறையாக குழுமத்திடம் தெரிவித்தால் அதற்கு பதிலளிக்க முயற்சியெடுக்கலாம். ஒரு சிலர் பொதுவெளியில் எழுதிய சில விசயங்களை மிக மூத்த பதிவர் என்னிடம் மின் மடலில் கேட்டிருந்தார். அதற்கு விலாவரியாக பதிலளித்தேன். அதுதான் செய்ய முடியுமே தவிர, போகிற போக்கில் எழுதுவோருக்கெல்லாம் பதில் தர நேரம் அனுமதிப்பதில்லை.
மூன்று சங்கமங்களிலும் இது போல் ஆங்காங்கே சில குரல்கள் வேண்டுமென்றே வருவது இயல்பு. just like that கடந்து போகவேண்டியதுதான்.
நேற்றும் கூட என் பெயரை நேரிடையாக இழுத்து விமர்சனம் செய்ததால், மட்டுமே பின்னூட்டத்திலும் போனிலும் பதிலளித்தேன்.
குழுமம் என்பது ஒரு அமைப்புதான். விரும்புவோர் இருக்கலாம், இணைந்து பணியாற்றலாம். எதும் கட்டாயமில்லை. அதேபோல் குழுமத்தில் இருப்போரையும் யாரும் எதற்கும் கட்டாயப்படுத்த முடியாது. சங்கமம் நிகழ்வும் கூட குழுமத்தில் இருப்போர் தங்கள் நேரம், காசு, உழைப்பு செலுத்தி திட்டமிட்டு நடத்துவதுதான்.
அடடா... அருமையான விழா. சிற்சில குற்றம் குறைகள் இருந்தாலும் அவை தவிர்க்கப்படமுடியாதவை என்பது அங்கு வந்திருந்த அனைவரும் அறிவர். அதற்கு நீங்களும் சரி சிபியும் சரி வேறு அர்த்தங்கள் கற்பிக்க வேண்டாமே..
சங்கம நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த சங்கவி மற்றும் குழும நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு விழா நடத்துவது என்பது சுலபமான காரியம் அல்ல. உங்களின் ஒவ்வொருவரின் கடின உழைப்பும் அதில் அடங்கி உள்ளது.
கண்டிப்பாக உங்களின் ஒவ்வொருவரின் கடின உழைப்பை குறை கூறியது 200% தவறு தான் இதில் எந்த மாற்றமும் இல்லை. இதை நான் நேற்றே சிபி பதிவில் சொல்லி விட்டேன்.
ஒரு வீட்டில் ஒரு விழா நடத்தும் போது ஒரு சில வேளைகளில் சொந்த உறவினர்கள் கூட திருப்தி படுத்த முடியாத போது ஒட்டு மொத்த பதிவரையும் திருப்தி படுத்துவது என்பது இயலாத காரியம் ஆகவே லூஸ்ல விடுங்க சங்கவி.
தல இந்தமுறை நம்ம தப்புன்னு பாத்தா போன ரண்டுதடவையும் நாம நடத்துன மாதிரி கலந்துரையாடல் நடத்தாமா விட்டதுதான்,அதை உணவுக்கு பின்னுனு தள்ளிவெச்சதுதான்,ஆனா நாம அதை முடிச்சிட்டு மதிய உணவு ஆரம்பிச்சிருக்கனும்..
இன்னும் கொஞ்சம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்திருக்கனும்....
முழுசா எதையும் தெரியாம தனிநபர குறிப்பிட்டு பேசுரது தப்புதான்...
ஆனா அவர் பதிவு நான் முதமுறையா இப்போ தான் படிச்சேன் செம காமடி :-)))
சென்னை பத்தி பேசுராங்க,திருப்பூர் பத்தி பேசுராங்க,நம்மையும் பேசுராங்க...
நீங்க வேனா பாருங்க அடுத்ததடவ அவங்க வட அமெரிக்க பெட்னா,கனடா ,சிங்கை,கொழும்புன்னு....தொடரும் பாருங்க..படிக்க செம காமடியா இருக்கும்...
இனி அடுத்தவருசம் அவர் எழுதப்போகும் பதிவுக்காக வெயிட்டீஸ் :-)))
அப்புறம் மூத்த பதிவர் ராஜசேகர் அவர கூப்பிடுலைனு சொல்லுராரே,அவரையே கேக்க சொல்லுங்க,நான் ரண்டு முறை அவருக்கு அழைப்பிதழ் அனுப்பினேன்,அவர் தான் பதிலே அனுப்பல :-)))
போன ரண்டுதடவையும் யார் கூப்பிட்டு வந்தார்னு தான் தெரியல :-))
விழாவிற்கு நான் வரவில்லை. ஆனாலும் விழா பற்றிய பதிவுகளை படித்தபோது ஒரு நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் தான் இருந்தது.
வந்தவர்கள் எல்லோருக்கும் நிறைவான உணவளித்து, வெளியூர்காரர்களுக்கு தங்க வசதி செய்து கொடுத்து இவ்வளவு நல்லமுறையில் விழா நடத்தியதை பாராட்டவேண்டுமே தவிர குற்றம் குறை கண்டுபிடிப்பது நாகரிகம் இல்லை. அப்படியே குறை தெரிந்தால் கூட அதை விழா குழுவினரிடம் மட்டும் ஒரு ஆலோசனையாக கூறலாமே தவிர இப்படி பொதுவாக கும்மியடிப்பது சரியல்ல.
ஒரு கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
துரியோதனனையும், தருமரையும் பார்த்து, துரோணர் இந்த ஊரில் எத்தனை நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்து வரச் சொன்னார். துரியோதனன் ஊரை சுற்றிப் பார்த்துவிட்டு வந்து "ஊரில் ஒரு நல்லவன் கூட இல்லை" என்றானாம். தருமர் ஊரை சுற்றிப் பார்த்துவிட்டு "ஊரில் ஒரு கெட்டவன் கூட இல்லை" என்றானாம். எல்லாமே பார்க்கிறவன் பார்வையில் தான் இருக்கிறது.
இதையெல்லாம் நீங்கள் கண்டுக்கொள்ளாமல் இருப்பது தான் சரியான பதிலாக இருக்கும்.
unga mokka, ravusu thaangamudiyalappaa.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
******* மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********
.
அது ஒரு போஸ்டுன்னு அதுக்கு பதில் சொல்றிங்களே தல
Enappa.. Nalla valachu valachu sanda podungappa....
Post a Comment