Pages

அஞ்சறைப்பெட்டி 23/02/2012

Wednesday, February 22, 2012 14 comments
உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கடந்த ஒரு மாதமாக தமிழக போலீசுக்கு தண்ணிகாட்டிக்கொண்டு இருந்த கொள்ளையர்கள் நேற்று இரவு சென்னையில் போலீசாரால் சுட்டுக்கொள்ளப்பட்டனர் என்று காலை செய்தியில் பார்த்ததும் மிக மகிழ்ச்சி...

கொள்ளையர்கள் ஆந்திராவுக்கு போனவங்க எல்லாம் திரும் வந்துட்டானுக என்று என்ன கிழி கிழி என்று கிழித்தவர்கள் எல்லாம் இன்று காலை கிலி வந்திருக்கும்..

தமிழ்நாட்டு திருடன் என்றால் நம் போலீசார் 15 நாட்களில் கண்டு பிடித்து விடுவர் காரணம் அவனுக பல இடங்களில் திருடி இருப்பானுக அதனால் கைரேகை எப்படியும் கிடைத்து விடும்..

இப்ப தமிழ்நாட்டில் அதிகம் இருப்பது பீகார், உபி, மேற்கு வங்க திருடர்கள் தான் அதிகம் இவனுக ஒரு முறை திருடிவிட்டு அவனுக ஊருக்கு போய்விடுகிறானுக இந்த புது கைரேகையை வைத்து எங்க போய் பிடிக்கறது இதனால் தான் நம்ம போலீசுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்திருந்து புதுசு புதுசா யோசிச்சு இந்த திருடர்களை என்கவுண்டர் செய்த தமிழக போலீசுக்கு ஒரு ராயல் சல்யூட்....

...............................................................................................

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் ஏற்கவே சூடு பிடித்த நிலையில் தேமுதிகவும் அம்மாவின் சவாலை ஏற்று போட்டி இடுவதாக அறிவித்துள்ளது. இன்னும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே மந்திரிகள் கூட்டம் அங்கு முகாமிட்டு தீவிர ஓட்டு வேட்டையாடிக்கொண்டு இருக்கின்றனர். திமுகவும், மதிமுகவும் தீவிர பிரச்சாரத்தில் இறங்க ஆரம்பித்துவிட்டன ஆக மொத்தம் இந்த இடைத்தேர்தல் பணம் கொட்டும் தேர்தலாக இருக்கும்... வாழ்த்துக்கள் சங்கரன்கோவில் அதிஷ்டசாலி வாக்களர்களுக்கு...

...............................................................................................

பெங்களூர் வழக்கில் மாற்றம் ஏற்பட்டு அம்மாவுக்கு இந்த வழக்கில் பிரச்சனை இருக்காது என்பது போல் இருப்பதால் உடனே சிபிஐ அம்மாவின் மேல் உள்ள பிறந்தநாள் பரிசு வழக்கை தூசி தட்டு எடுத்து மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளனர் உச்சநுதிமன்றமும் ஏற்று நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.. இந்த வழக்கு அம்மாவின் மேல் உள்ள கோபத்தில் அவரை மனஉளைச்சல் ஏற்படுத்துவதற்காகவே போடப்பட்டுள்ளது போல் உள்ளது..

எதையும் தாங்கும் இதயம் என்று அண்ணா சொன்னது போல் எதையும் சந்திக்கும் மனதைரியம் அம்மாவிற்கு உண்டு..
................................................................................................

கேரள கடல்பகுதியில் 2 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இத்தாலிய துணை வெளியுறவு அமைச்சர் இன்று டெல்லி வருகிறார். இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அடுத்த வாரம் வருகிறாராம்..

நம்ம ஆளுங்கல இந்தப்பக்கம் தினமும் அடிச்சு விரட்டறானுக ஆனா நம்ம வெளியுறவுத்துறை அமைச்சர் உடனே போகிறாரா இல்லை மாநிலத்தில் ஆளும் கட்சிகள் தொடந்து கடிதம் அனுப்பினாலும் அதை அந்த நாட்டிடம் பேசுவதற்காக இது வரை சென்ற மாதிதி தெரியவில்லை... இத்தாலிக்காரங்கள பாருங்க ஒரு வாரத்தில் அவர்கள் ஆட்களை பாதுகாக்க எத்தனை முயற்சிகள் எடுதிது வருகின்றனர்.. நாமூம் தான் இருக்கோமே...

................................................................................................

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில பள்ளியொன்றில் 12 இளம் மாணவிகளுக்கு ஒரே வகையான அதிசயமான நோய் அறிகுறியொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Conversion Disorder அல்லது Mass Hysteria என அழைக்கப்படும் இந்நோய் அறிகுறி, அவர்கள் மன உளைச்சலுக்கோ அல்லது மன அழுத்தத்திற்கோ ஆளாகும் போது திடீரென அவர்களது உடலில் ஏற்பட்டுவிடுகிறது.

தங்களுக்குள் இந்நோய் அறிகுறி ஒரே மாதிரியாக இருப்பதே நீண்ட தேடுதலுக்கு பின்னர் தான் அந்த மானவிகளுக்கு தெரியவந்துள்ளது. மிக அரிதான நிகழ்வாக இதை குறிப்பிடும் டாக்டர்கள், அவர்கள் நடிக்கவில்லை. உண்மையில் இதனால் வலியை உணர்கின்றனர். முன்னர் உலகெங்கிலும் பல பாகங்களில் இது நடைபெற்றுள்ளது. ஆனால் இதை உளவியல் சிகிச்சை மூலம் முற்றாக குணப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பார்வை மங்குதல், பேச முடியாமல் தவித்தல், உடல் உதறுதல், நரம்பியல் சார்ந்த சில பிரச்சினைகளை எதிர்கொள்ளல், என அனைத்தும் ஒரே நேரத்தில் இவர்களுக்கு திடீர் திடீரென வந்து போகிறது. 'நன்றாகத்தான் இருக்கிறேன். ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் நித்திரையிலிருந்து காலையில் எழுந்ததும் இப்பிரச்சினை தொடங்கிவிடுகிறது 

..................................................................................................

இங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்தவர் டாரென் (41). இவரது மனைவி தெரசா (32). இவர்களது மூத்த மகன் ஷாஜெரி ஜாக் ஏவெரி (5). இவர்களுக்கு அலெக்ஸ் என்ற மற்றொரு மகனும் இருக்கிறான். ஷாஜெரியின் 3-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவன் தான் ஆண் அல்ல, பெண் என்பதை உணர்ந்தான். தனது பெற்றோரிடம் நான் பெண் குழந்தை என கூறி அடம்பிடித்தான். 
ஆண் குழந்தைகள் விளையாடும் பொம்மையை தூக்கி எறிந்து விட்டு பெண் குழந்தைகளுக்கான பொம்மையை எடுத்து விளையாட தொடங்கினான். அவனின் இந்த நடவடிக்கைகள் பெற்றோருக்கு அதிர்ச்சியையும், கவலையும் ஏற்படுத்தியது. உடனே, அவனை மனோதத்துவ டாக்டரிம் அழைத்து சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர் அவன் ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை என அவனது மூளையும் மனதும் சொல்கிறது.
எனவே அவன் மனதளவில் பெண் குழந்தைதான் என்று தெரிவித்தார்.   அதைத் தொடர்ந்து அவன் தனது 5 வயதில் பெண்ணாக மாறினான். பெண் குழந்தைகளுக்குரிய ஆடைகள், அணிகலன்களை அணிகிறான். நீண்ட முடி வளர்த்து இருக்கிறான். தற்போது அவன் படிக்கும் பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கான கழிவறையை பயன்படுத்தி வருகிறான். அவனது இந்த நடவடிக்கைக்கு பெற்றோர் சம்மதித்து பெண் குழந்தையாக வளர்த்து வருகின்றனர்.
.................................................................................................


தியானம் மேற்கொள்வதன் மூலம் கர்ப்ப கால மன அழுத்தம் குறைகிறது. கர்ப்பிணிகளுக்கு மசக்கை காலத்திய மயக்கம், உயர்ரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்றவை ஏற்படுவது கட்டுபடுத்தப்படுகிறது.

தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆக்ஸிஜன் அதிகரிப்பதால் குழந்தைகள் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. குழந்தைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

தியானத்தோடு கர்ப்பிணிகள் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று செக்அப் செய்து கொள்ளவேண்டும். சத்தான உணவுகளை உட்கொண்டு வர எளிதான சுகப்பிரசவம் ஏற்படும்.

.................................................................................................

24.02.2012 நாளை பிறந்த நாள் காணும் இன்று தமிழகத்தின் முதல்வர் நாளை இந்தியாவின் பிரதமராகும் எங்கள் அம்மாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

தகவல்
உண்ணாவிரதம் இருந்தால் நீண்ட நாள் உயிர் வாழலாம்
உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது உடல் நலத்துக்கு நல்லதா? அல்லது கேடு விளைவிக்குமா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. எனவே லண்டனில் உள்ள ஒரு நிறுவனம், சமீபத்தில் இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில், வாரத்துக்கு ஒருநாள் அல்லது 2 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.
அவர்கள் நீண்டநாள் உயிர் வாழமுடியும் என தெரிய வந்துள்ளது.   ஏனெனில் உண்ணா நோன்பை கடைபிடிப்பதன் மூலம் அல்சமீர்ஸ், மறதி நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் மூளையை தாக்க கூடிய எதிர்ப்பு மிகவும் குறைகிறது. குறைவான அளவு உணவு சாப்பிடுவதால் மூளைக்கு அதில் உள்ள ரசாயன கடத்திகள் குறைவான அளவு சக்தியை மட்டுமே கொண்டு வருகின்றன.
இதன் மூலம் மூளையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றிகரமாக தொடக்கத்தில் இந்த ஆய்வு எலி மற்றும் சுண்டெலிகளிடம் நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது. அதே விளைவு மனிதர்களின் உடலிலும் ஏற்பட்டதை தற்போது நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, உடல் நலத்தை பேணி பாதுகாத்து நீண்ட நாட்கள் உயிர்வாழ உண்ணா நோன்பை கடைபிடிக்கலாம். 
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர் கீதாமஞ்சரி என்ற பெயரில் எழுதி வருகிறார். ஆஸ்த்திரேலிய பள்ளிகள் பற்றி அற்புதமான தொடர் கட்டுரை எழுதி வருகிறார் நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று...

http://geethamanjari.blogspot.in/
தத்துவம்

தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

ஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?

ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்க்கையில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளைச் சரிவர செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம்.  

சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் இளைஞனுக்கு வாருங்கள் உதவுவோம்...

Sunday, February 19, 2012 8 comments
நம் தமிழ் இளைஞன் ஒருவர் (மகேந்திரன்) சத்திமில்லாமல் கல்விக்காக பல திட்டங்களை துவங்கி அது வெற்றி பெற பல முயற்சிகள் செய்து சில வெற்றிகளும் பெற்றுள்ளார். 

நண்பர் அன்பழகன் மூலம் அறிமுகமான இவர் எனக்கு ஒரு மின்அஞ்சல் அனுப்பி இருந்தார் அதன் மூலம் அவரின் கல்வித்திட்டம் பற்றியும் அதற்காக அவர் பெற்ற விருதையும் இனி பெறப்போகும் விருதையும் அறிந்தேன் நாம் அனைவரும் வாக்களிப்பதன் மூலம் அவர் வெற்றி இன்னும் அதிகமாகும்.. மகேந்திரனைப்பற்றியும், அவரின் திட்டங்கள் பற்றியும்...


 தமிழகத்தை சார்ந்த மகேந்திரன் மற்றும் குழுவினர்  அனைத்து சுற்றுகளையும் தண்டி  "இந்தியாவின் தலைசிறந்த திட்டம் - (India's Top innovative Concept)" பட்டதை வென்றனர். இவர்களது திட்ட நேர்காணல் மட்டும் (முழு திட்ட வடிவமைப்பை வெளியிட கூடது ) NDTV profit ஒளிபரப்ப படவிருகிறது.

இவர்களது திட்டம் - Dreamkampus - innovate! educate!  

கல்வி அமைப்பில்  ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது இவர்களில் எண்ணம். அதிலும் கிராமப்புறம் மற்றும் குறு நகரன்கிளில் உள்ள பள்ளி கல்லூரிகளை சர்வதேச அளவில் கற்பிக்கும் முறையில்  மாற்றவேண்டும். அனைவர்க்கும் எளிமையான முறையில் கல்வி கிடைக்க செய்வது இவர்களில் குறிக்கோள். இதற்கான மென்பொருள் வடிவமைப்பை உருவாக்குவது மற்றும் அதை கல்ல்விக்காக மட்டுமே உபயோகிப்பது, கிராமப்புற ஆசிரியர்களுக்கு பெரிய பேராசிரியர்கள் உதவு செய்வது, முப்பரிமான (3d) பாட திட்டங்களை வடிவமைப்பது போன்ற பல வளர்சிகளை  கிராமப்புறம் மற்றும் குறு நகரன்கிளில் உள்ள பள்ளி கல்லூரி ஆகியவற்றிகு வழங்குவதின் மூலம் சர்வதேச வளர்ச்சியை உருவாக்க முடியும். 

உதவுங்கள் தமிழ் நண்பர்களே!!

"இந்தியாவின் தலைசிறந்த திட்டம் " தற்போது உங்கள் வோட்டு இருந்தால் பல கிராம மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும். மகேந்திரன் இவர் திருப்பூர்/ ஈரோடு - தாராபுரம் அருகே உள்ள கள்ளிவலசு/குண்டடம்  கிராமத்தை சார்த்தவர்.  இவரைப் போன்றவற்றுக்கு நாம் உதவி செய்வதம் மூலம் எதிர்கால கல்வி எல்லா கிராமங்களுக்கும் கிடைக்கும்.கிராமத்தில் இருந்து நகரம் தினமும் காலை மாலை  இரண்டு மணிநேர பயணம் பள்ளி கல்விக்காக.  பெற்றோர் சொந்தகளை விட்டு உயர்கல்விக்க வேறு நகரை வந்தது உயர்கல்விக்காக. கிடைத்த வேலையை வைத்து வெளிநாடு சென்று செட்டில் ஆகி இருக்கலாம். ஏனோ தெரியவில்லை செல்லவில்லை. ஒரு முயற்சி நான் கண்ட கனவுகள் "கிராமத்திலும்/சிறு நகரத்திலும் மிகச்சிறந்த கல்விகிடைதால், என் கிராமம் அழியாது,விவசாயம் அழியாது", போன்ற எத்தனையோ உள்ளது. இந்நேரம் அறிவியல் முறைகளை என்னை சுற்றி உள்ள மக்களுக்கே சொல்லி இருப்பேன். இதை மேலும் மேலும் வளர விட மனம் இல்லை. அதுதான் "dreamkampus" - யன் கனவுகளையும் நாம் கற்ற கல்வியையும் இணைத்து ஒரு புதிய கோணத்தில் பயணத்தை தொடங்கி உள்ளோம். 

லெனோவோ டூ நெட்வொர்க் (Lenovo Do network) - நிறுவனம் இந்தியாவின் தலைசிறந்த, சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த கூடிய பத்து திட்டங்களை தேர்தெடுக்கும் ஒரு தளம். இதில் எல்லா  துறையில் இருந்தும் பங்கேற்கலாம். அவை "இந்தியாவின் தலைசிறந்த திட்டம்-India's Top innovative Concept " பட்டதை வெல்ல முடியும். மேலும் ஒரு திட்டம் மக்கள் வாக்கெடுப்பில் $25000 ஊக்கத்தொகையாக பெரும்.

இந்த முறை 27000+ போட்டியளர்கள் பங்கவ்ற்றனர்.கடந்த மூன்று மாத காலமாக மூன்று நிலைகளில் தேர்தெடுப்பு  நடந்தது.
இதில் தமிழகம் சார்த ஒரு குழு "கல்வி முறை மற்றும் கல்வி சார்த்த துறையில் " தேர்தெடுக்க பட்டுள்ளது. 

சோதனைகல் பல !!!

இப்போட்டியில் " இந்தியாவின் தலைசிறந்த திட்டம் - (India's Top innovative Concept)" பாட்டத்தை வெல்வது சுலபம் அல்ல.

 1.ஆறு தகுதி சுற்றுகளில் முதலில் தேர்ச்சி பெற வேண்டும்.
2.முதல் கட்ட வாக்கு மற்றும் சோதனைகளில் தேர்சி பெற வேண்டும்.
3.எட்டு பெரிய தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் குழுக்கள் ஆய்வு செய்யும்.

4.The Mentors / selection board 

1.Rajiv Makhni   - Managing Editor for Technology at NDTV, New-Delhi, India
2.
Rajan Anandan - MD Google India, India
3.
Narvir Chand Sud - Former Scientist G DRDO, Bangalore, India
4.
Mahesh Murthy - Managing Partner at Seedfund; Founder & CEO at Pinstorm; Founder & Principal at passionfund, Mumbai, India
5.
Kishore AK - Co-Founder & CEO of Althea Systems, Bangalore, India
6.
Shantanu Prakash - Chairman and Managing Director of Educomp Solutions Limited, Delhi, India
7.
Maxwell Pereira - CEO- Maxwell Pereira Advisors Pvt Ltd.,Ex-IPS officer, Delhi, India
8.
Shiva Prasad - Dean Academics- Indian Institute of Technology, Bombay, Mumbai,

இந்த குழுவின் தேர்வில் 40/50 போட்டியளர்கள் முழு தகுதிநிலை அடைவார்கள். மேலும் நேர்கானல், கேள்வி சுற்று போன்றவை நடத்தபடும்.

இறுதியாக 10 வல்லுனர்களும் டெல்லிஇல் பிப் 16,17 18 ஆகிய தேதிகளில் அனைவர் முன்னிலையிலும் சமபிர்பார்கள்.இந்த நிலையில் கூட அவர்கள் வெளியேற்ற படலாம்.இன்று காலை முழு அங்கீகாரம் அல்லிகபட்டு  "இந்தியாவின் தலைசிறந்த 10 திட்டம் - (India's Top Ten innovative Concept)" அருவிக்க பட்டது.

இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது. நாங்கள் ஒரு வாக்குகள் பெற வேண்டும். ஒவ்வொருவரும் தினம் ஒரு வாக்கு பதிவு செய்யலாம். எல்லோரிடமும் சொல்லுங்கள் !

உங்களின் மூன்று நிமிட நேரம் ஏதோ ஒரு மாணவனின் வாழ்க்கையாக மாறும்!! 

வாக்களிக்கும் முறை  : 
1.http://donetwork.lenovo.com/in/project-detail_1759_Dream-Kampus.html  தலத்தில் உள்ள அவர்கள் த்திடர்திற்கு நீல நிற "vote for project" லிங்க் 
2.Facebook நுழைவை வைத்து உள்ளே நுழையுங்கள்.
3.இப்போது மீண்டும் வோட்டை பதிவு செய்து உறுதி செய்யுங்கள்
அல்லது - Email முகவரி பதிவு செய்தும் வாகளிகலம்.

மகேந்திரனைப்பற்றி அறிய..
twitter - @mahedreams
நண்பர்களே ....
இப்பதிவின் மூலம் இந்த மாணவனின் திட்டம் உங்களுக்கு பிடித்திருந்தால் இப்பதிவை அனைவருக்கும் கொண்டு செல்லவும்.. இந்த இளைஞனின் முன்னேற்றத்தில் நம் பங்கும் இருக்குட்டும்... அனைவரும் வாக்களிக்கவும்..
தங்கள் அன்புள்ள
சங்கவி...